சொல்லுதல்

4:05 பிப இல் ஏப்ரல் 25, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

எது நிச்சயம் எது நிரந்தரம்
என்ன வேடம் இன்றைக்கு
எதுவும் எனதாவது இல்லை
நகரும் ரயிலின் ஒசை போல்
இடைவிடாத லயத்தில் இயக்கம்
ஐம்புலன் அறிவே எனது பார்வை
நிகழ்வுகள் ஐம்புலன் கடந்தவையானால்
நிகழ்வின் விளிம்பினை கொண்டே
நிகழ்வு அளக்கப்படுதல் நிச்சயம்
ஆனாலும் எதாவது ஒரு புள்ளியில்
நின்று எனக்கானதை சொல்லுவேன்

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.