புராணங்கள்
செப்டம்பர் 24, 2007 at 7:11 பிற்பகல் | In கவிதை | Leave a Commentபுராணமெனும் அடிமைச்சங்கிலி
பூட்டபடுகையில் அது புனிதமெனும்
பட்டால் அலங்கரிக்கபடுகின்றது
சங்கிலியின் சலசலப்பே
சாத்திரமென மொழியப்படுகின்றது
புகை வரும் எதுவும் ஊதுபத்தியென
புகட்டபட்ட நிலையில்
கொள்ளிக்கட்டையில் சதை எரிந்தாலும்
கற்பூரமென கண்ணில் ஒத்திக் கொள்வதுதான்
கேபிட்டலிஸ்ட்
ஜூலை 16, 2007 at 3:34 பிற்பகல் | In கவிதை | Leave a Commentபத்து பழமொழியும்
பாக்கெட்டில் பத்திரமாய் உண்டு
கேட்பவன் அசரும் வரை
கொடுக்க அசதியில்லை
உயரிய சமூகம்
உழைப்பவன் சமூகம் என
வாய்தோரணம் அவிழ்க்கவும் முடியும்
இனமான கோஷங்கள் எழுப்பி
இருப்பவன் கண் கட்டவும் தெரியும்
பிள்ளைக்கு ஊரான் சொத்து
பெரிய அக்காவுக்கு வீடு
சின்ன தங்கைக்கு பெண்ஸ் கார்
மைத்துனனின் ஒன்றுவிட்ட
அத்தைக்கு பதவி
எல்லாம் கொடுத்தாலும்
இன்னமும் நான்
இனமான பொதுவுடமை சிங்கந்தான்
ஏனெனில்
எட்டு
ஜூன் 21, 2007 at 2:48 பிற்பகல் | In டைரி குறிப்பு | 3 Commentsஎட்டெழுத கடுமையாக முயற்சித்த பின் கிடைத்தவை இவை
1) முப்பத்திரெண்டு வருடங்களுக்கு பின்னும் எழுதும் படியான எட்டு தகவல்களை யோசித்தால் தலை சுற்றுகின்றது.
2) அடுத்த எட்டு பேராக யாரை அழைப்பது என்று யோசித்தால் சுற்றிய தலை தனியே கழண்டு பறந்து விடும் அளவுக்கு போய் விடுகின்றது.
3)
4)
5)
6)
7)
இரண்டிற்கு மேல் எழுதியிருப்பது எல்லாம் சாதாரணமாய் பார்க்கும் மக்கள் கண்களுக்கு தெரியாது. அது ஒரு சிறப்பு எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உங்கள் மானிடரில் இந்த பதிவை தொடர்ந்து உற்று பார்க்கும் பட்சத்தில் அவை கண்களுக்கு புலப்படும்.
அழைப்பு விடுத்த பாலாவிற்கும், விக்கிக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
அடுத்த எட்டு பேர்
1) சிவாஜி ராவ் என்ற ரசினிகாந்த்
2) ஷ்ரேயா
3) கருணாநிதி
4) ஜெயலலிதா
5) லியர்னாடோ டாவின்சி
6) ரூஸோ
7) கடவுள்
இந்திய குடிமகன்
முக்கிய குறிப்பு
ஜூன் 19, 2007 at 1:42 பிற்பகல் | In Uncategorized | 1 Commentகருத்தெல்லாம் எதிர்பார்த்து திரைப்படங்கள் போவதில்லை. திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கே என்ற நம்பிக்கை உண்டு. நண்பர்கள் சகிதமாய் நேற்று திரையரங்கு சென்று சிவாஜி பார்த்து விட்டேன்.
ரஜினி இளமையாய் இருக்கின்றார்( பவுடர் செலவு பட்டையை கிளப்பி இருக்கும்).
ஜென்டில்மேன் பட கதையை அங்கும் இங்கும் ராவி புதுசாய் சொல்லியிருக்கின்றார்கள்.
பாட்ஷா பார்த்த போது இருந்த உணர்வு இந்த படம் பார்த்து வரவில்லை.
லேசாய் தலைவலி வந்தது.
சஹாணா பாடல் படமாக்கிய இடம் நன்றாக இருந்தது.
அரங்கு நிறைந்திருந்தது.
இன்றைய நிலை
ஜூன் 8, 2007 at 2:59 மு.பகல் | In கவிதை, சுற்றி நடப்பவை | Leave a Commentபிணம் இருக்கின்றது
இவனுக்கு அழதான் ஆசை
உற்றோரோ உறவினரோ
பெரியோரோ சிறு பிள்ளையோ
சிதைந்து விழுந்து
வலித்து செத்தவர் காண
அழதான் ஆசை
ஆனால் பிணத்தின் குறி
தெரியால் மொழி தெரியாமல்
சாதி தெரியாமல் கட்சி தெரியாமல்
கண்ணீர் விட்டு ஆவதென்ன
லாபமோ நஷடமோ
கணக்கு பார்க்காமல்
கண்ணீர் விடுவதில்லை
லாபத்தில் எள்ளல் வரலாம்
லாபத்தில் சிரிப்பு வரலாம்
செத்தவன் முகத்தில் சாணியும் வீசலாம்
அது வரை இரக்கப்படு
இளிவாச்சயன் ஆவதில்லை இவன்
ஏனேனில் இவன்தான் இன்றைய
சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் ஏகபிரதிநிதியாம்
வாழ்க சமூகநீதி!
***********************
பிணங்களும், வன்முறைகளும் அதை சார்ந்த பிரச்சாரங்களும் தரும் வெறுப்பில் எழுதியது.
****************************
மதுரையில் மூன்று பிணங்கள்
தரும்புரியில் மூன்று பிணங்கள்
விழுப்புரத்தில் கொளுத்தப்பட்டு காயமடைந்த காவலர்.
அவனும் நானும்
ஜூன் 3, 2007 at 5:26 மு.பகல் | In கவிதை | Leave a Commentஅடிக்கடி பார்க்கின்றேன்
எப்போதும் தெரிகின்றான்
வெறித்த பார்வை உண்டு
அந்நிய வாசனை அதிகமுண்டு
நேற்று இவன் போல் இருந்திருப்பேனோ
நாளை இவன் போல இருப்பேனோ
என்றாவது என்னை போல
இவன் இருக்க விழைவானோ
படபடப்பும் அதில் நுழையும்
பயங்களும் படர ஆரம்பிக்கும் வேளையில்
இடமும் வலமும் மாறி தெரியும் ஆடி
நகரந்து செல்ல வேண்டியதாகின்றது
மீதி உரையாடல் நாளைக்கு
வார கடைசி(மெமோரியல் டே)
மே 31, 2007 at 4:07 பிற்பகல் | In டைரி குறிப்பு | Leave a Commentஇந்த வாரம் பார்த்த படங்கள்
Crank- போர்.
Deja-Vu – நல்ல படம்
Music and Lyrics- சுமார்
Casino Royale – நல்ல ஆரம்பம், அப்புறம் போர், இறுதிக்காட்சி ஏமாற்றம்
பின்கோடு வைத்த கிரிக்கெட் படம்(தமிழ்)- நன்றாக இருந்தது. காதல் பாடல்கள்தான் சம்பந்தமே இல்லாமல்.
தோழியும், மகளும் இல்லாமல் வாரக் கடைசி சரியில்லை. பழைய பிரம்மச்சாரி வாழ்க்கை ரசிக்க முடியவில்லை. வயதாகி விட்டதோ?
வாசலில் வைத்த ரோசா பூத்திருந்தது. good.
அலசல்
மே 23, 2007 at 7:56 பிற்பகல் | In டைரி குறிப்பு | 3 Commentsஒவ்வொரு நாளும் எதுவும் நடக்கும் என்பது அவசியமில்லை. ஒன்றும் நடக்காமலே நாள் முடியலாம். இன்று அப்படிதான் போகுமென பட்சி சொல்கின்றது.
தோழனுக்கு பிறந்த நாள். மறந்து போயாகி விட்டது. பின் கோடு வைத்த கிரிக்கெட் படம் டிவிடியில் வந்திருக்கின்றது. இந்த வாரம் பார்க்க வேண்டியதுதான்.
அதிர்வுகள் தகவல்களாக போய் விடுகின்றது. ராஜிவ் இறந்த போது இருந்த அதிர்வுகள் இந்த மே மாதம் 21ம் தேதி நகர்ந்த போது நியாபகம் கூட இல்லை.
கருணாநிதி கலைஞர் சானல் ஆரம்பிப்பார் போல உள்ளது. ஒரே நேரத்தில் அதிக பரப்பான மக்களை சந்திக்க ஊடகம் தேவை. it is really powerfull.
பங்களாதேஷோடு சதம் அடித்த உடனே என் பதினேழு வருட கிரிக்கெட்டுக்கு பின் யாரிடமும் எதையும் நிறுபிக்க வேண்டியதில்லை என டெண்டுல்கர் மொழிந்துள்ளார். அண்ணாச்சிக்கு எதையும் நிறுவ வேண்டிய அவசியமில்லையெனில் மூட்டையை கட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே. என்ன கருமத்துக்கு இன்னமும் மட்டையை கட்டி களத்தில் இறங்கி கொண்டிருக்கின்றார்.
அழகிய தமிழ்மகன் உலகம் சுற்றும் வாலிபனின் கதை என படித்தேன். அட பாவிகளா விஞ்ஞானி முருகனை உலகத்துக்கு கொடுத்த நல்ல படத்தை நாசம் செய்து விடாதீர்கள். போக்கிரி பார்த்த பின் விஜயை கண்டால் பூச்சாண்டியை பார்த்தது போல் இருக்கின்றது.
இன்று
மே 22, 2007 at 4:24 பிற்பகல் | In டைரி குறிப்பு | Leave a Commentஒரு நல்ல உரையாடல் என்பது இரு புறமும் இலக்கு வைத்து நகரும் போது நேருவதில்லை. அது போல் இருக்கையில் வர்த்தக பேச்சுவார்த்தையாகதான் அமைகின்றது. உரையாடல் தொடங்கும் புள்ளி, முடியும் புள்ளி என அமையாமல் பரவலாக அமையும். புலி ஒன்றை இழுத்து பிடித்து பயத்துடன் இருப்பது போல் இருந்தது, உரையாடலின் பின் பிடிமானம் இன்றி பளு குறைந்த உணர்வு உண்டாகின்றது.
கண்களில் குறும்புடன் மகள் சில நேரம் மூக்கை காட்ட சொன்னால் தலையை காட்டுவதும், தலையை காட்ட சொன்னால் மூக்கை காட்டுவதுமாய் இருக்கின்றாள். சில நேரம் சரியாக சொல்லவும் செய்கிறாள். பத்து மாதம் முடிந்து விட்டது. time flies.
good day man.
காரில் கேட்டு மனதில் நின்ற பாடல் : நினைத்து நினைத்து பார்த்தேன் (7g ரெயின்போ காலனி). இனிமையான பாடல். ju
மனதில் பட்டது
மே 21, 2007 at 4:39 பிற்பகல் | In டைரி குறிப்பு | Leave a Commentஎல்லோரையும் சந்தோஷமாக வைத்திருப்பது முக்கியந்தான். ஆனால் அது எப்போதும் கை கூடுவதில்லை. அதன் பக்க விளைவு ரசிக்கும் படியும் இருப்பதில்லை. குறைந்த பட்ச எதிர்பார்ப்போடு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்த்து ரசிக்கலாம் என்னும் சிந்தாந்ததில் எனக்கு நிறைய நேரம் நம்பிக்கை ஊஞ்சலாட்டம் நடக்கின்றது.
பிரச்சனைகள் தீர்வதில்லை, ஒத்தி வைக்கப்படுகின்றன. ஒத்தி வைக்கப்பட்ட நேரத்தில் கொஞ்சம் கொறித்து கொள்ள சந்தோஷமும் அவை சார்ந்தவைகளும். சுய எதிர்பார்ப்பில் ஏதேனும் பங்கம் வருகையில் கொறிப்பதை தூக்கி எறிந்து பிரச்சனையை மீண்டும் பொதுவில் வைத்து கம்பெடுத்து சுலற்ற வேண்டியதுதான், அடுத்து கொறிக்க ஆசை வருகையில் கம்பை தூக்கி போடலாம், இல்லாவிட்டால் கை வலித்தால் கம்பை தூக்கி போடலாம்.
life sucks
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.